new blinking  வீடமைப்புத்திட்டம்- 2026

வலிகாமம் தெற்கு, உடுவில் பிரதேச செயலக பிரிவில் 2026 ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்டத்தில் 3ஆம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் விபரங்கள் வருமாறு இவ்விபரம் தொடர்பாக பிரதேச செயலகத்திலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இவை தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் எழுத்து மூலம் பிரதேச செயலருக்கு அறியத்தரவும்  

பயனாளிகளின் விபரம்

 

இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தினம்

 
எமது இலங்கைத் தாய்த் திருநாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று (04.02.2025) வலி தெற்கு பிரதேச செயலகத்தில் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்கள் சகிதம் இனிதே கொண்டாடப்பட்டது. மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்துச் சுதந்திர தின உரையினை நிகழ்த்தினார். பின்னர் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் மற்றும் மதிப்புக்குரிய உதவிப் பிரதேச செயலாளர் இணைந்து மரக்கன்று நாட்டி வைத்தனர். அத்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது
 
     
 
WhatsApp Image 2025 02 04 at 13.19.32 4c5aaa66   WhatsApp Image 2025 02 04 at 13.19.32 09438d55   WhatsApp Image 2025 02 04 at 13.19.33 b9e3a07d  
           
WhatsApp Image 2025 02 04 at 13.19.33 d039f9e4   WhatsApp Image 2025 02 04 at 13.19.34 c72f8fe9   WhatsApp Image 2025 02 04 at 13.19.34 90f5a7f1  
           
WhatsApp Image 2025 02 04 at 13.19.34 2f7e12fe   WhatsApp Image 2025 02 04 at 13.19.35 b566ff4f    WhatsApp Image 2025 02 04 at 13.19.35 0d0a98b2  
 
 

"தூர நோக்கு (Vision)"

புதிய தொழிநுட்பத்துடன் இணைந்த வினைத்திறனும் பயனுறுதியும் கொண்ட பொதுச்சேவை வழங்கும் உன்னத நிறுவனம் ஆதல்.

 
 

"செயற்பாடு (Mission)"

மக்களின் அபிலாசைகளுக்கும், அடையாளம் காணப்பட்ட தேசிய முன்னுரிமைகட்கும் ஏற்றதாக மக்களின் பங்களிப்புடனான நிலைபேறான பிரதேச அபிவிருத்திக்கு வினைத்திறனும், பயனுறுதியும் கொண்ட பொதுச்சேவையினை உத்தரவாதப்படுத்தல்.

இலங்கையின் யாழ் மாவட்டத்தின் மையப்பகுதியாக வலிகாமம் தெற்கு பிரதேச செயலகம் விளங்குகிறது. வடக்கில் வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச செயலகமும், கிழக்கில் வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலகமும், தென்கிழக்கில் நல்லூர் பிரதேச செயலகமும், மேற்கில் வலிகாமம் தென்மேற்கு (சண்டிலிப்பாய்) பிரதேச செயலகமும் எல்லைகளாக அமைந்துள்ளன. இப்பிரதேச செயலகப் பிரிவில் 30 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன. பெரும்பாலான கிராமங்கள் செம்மண் வகையைச் சார்ந்த நிலங்களைக் கொண்டவையாகும். குப்பிழான், ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், ஈவினை, சுன்னாகம், கந்தரோடை, உடுவில், இணுவில், தாவடி மற்றும் சங்குவேலி ஆகிய கிராமங்களில் பணப்பயிர் வகைகள், வெங்காயம், மரக்கறி போன்றனவற்றைப் பயிரிடுவதற்கு ஏற்ற வளமான மண்வகை உள்ளது.

சுன்னாகம் பகுதியானது நகரமயமாதலின் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்தப் பிரதேச செயலகத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. குறிப்பாக விவசாய அபிவிருத்தி  மற்றும் விவசாயம் சார்ந்த கைத்தொழில் அபிவிருத்திக்கு ஏற்ற இடமாக இப்பகுதி அமைந்துள்ளது.

 
          

எமது முன்னாள் பிரதேச செயலாளா்கள் 

பெயர் இருந்து வரை
திரு.பி.எல்.பற்றிக்                1972 1977
திரு.எஸ்.குமாரசாமி 1977 1978
திரு.ஏ.சி.செபநாயகம் 1978 1984
திரு.ஆ.மகாலிங்கம்           1984 1990
திரு.வே.வீரபத்திரபிள்ளை 1990 1991
செல்வி.த.தனுஜா 1991 1994
திரு.ஆ.மகாலிங்கம் 1994 2001
திரு.க.கேதீஸ்வரன் 2001 2002
திரு.எஸ்.ஆா்.ஜெயப்பிரகாசம் 2002 2003
திரு.சி.திருவாகரன் 2003 2007
திருமதி.ச.மஞ்சுளாதேவி 2007 2012
திரு மு.நந்தகோபாலன் 2012 2017
திருமதி வ.மதுமதி 2017 2018
திரு சி.ஜெயகாந் 2018 2020 
திரு டி.முகுந்தன் 2020 2023
திரு.பா.ஜெயகரன் 2023 இன்று 


 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

30
ஜூலை2025
முதியோர் கொடுப்பனவு

முதியோர் கொடுப்பனவு

 முதியோர் கொடுப்பனவு  

01
ஏப்2025

உங்கள் தொழிலை ஆரம்பியுங்கள்” (Start Your Business-SYB)

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) நிதி அனுசரணையுடன் வடக்கு...

குடியுரிமை சாசனம்

Scroll To Top